Fire in Chennai-Velachery MRTS. No injuries so far.
click here
சென்னை: கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயிலில் திடீரென தீ பற்றிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் தீ பற்றியதால் பயணிகள் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. இன்று காலையில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி இன்று காலை 8.30 மணியளவில் ரயில் புறப்பட்டது. பெருங்குடி ரயில் நிலையம்...
more... அருகே வந்த போது எஞ்சினை அடுத்த ஒரு பெட்டியில் திடீரென தீ பற்றியது. ஓடும் ரயிலில் தீ பற்றியதால் மளமளவென பரவியது. இதில் ஒரு பெட்டி முற்றிலும் எரிந்து நாசமானது.
இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். தீயினால் புகை மண்டலமாக காணப்பட்டதால் சுதாகர் என்ற பயணி மூச்சுதிணறி மயக்கமடைந்தார். இன்று அரசு விடுமுறை என்பதால் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே பறக்கும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்பது நினைவிருக்கலாம். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சதிச்செயலா? விபத்தா? என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.